search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபாட்டில்கள் கொள்ளை"

    • கடையின் உள்ளே இருந்த லாக்கரில் 2 நாட்கள் விற்பனை பணம் ரூ.3 லட்சம் இருந்து உள்ளது.
    • சித்தாமூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளை கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    சித்தாமூர் அருகே உள்ள பழவூரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் மதுக்கடையை பூட்டிச்சென்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மதுக்கடையின் பின்பக்க சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை கண்டு அவ்வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மதுபாட்டில்களும் உடைக்கப்பட்டு சிதறி கிடந்தன. பெட்டியுடன் மதுபாட்டில்களும் கிடந்தது. இதுபற்றி அறிந்ததும் சித்தாமூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நள்ளிரவு வந்த மர்ம கும்பல் மதுக்கடையின் பின்பக்க சுவரில் துளை போட்டு புகுந்து பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை அள்ளிச்சென்று இருப்பது தெரியவந்தது. வெளியே எடுத்து வந்த சில மதுபாட்டில்களை கொண்டு செல்ல முடியாததால் கொள்ளை கும்பல் அதனை அங்கேயே உடைத்தும் பெட்டியுடன் மதுபாட்டிலை விட்டும் சென்று உள்ளனர்.

    கடையின் உள்ளே இருந்த லாக்கரில் 2 நாட்கள் விற்பனை பணம் ரூ.3 லட்சம் இருந்து உள்ளது. அந்த லாக்கரை கொள்ளை கும்பலால் உடைக்க முடியாததால் மதுபாட்டில்களை மட்டும் அள்ளிச்சென்று உள்ளனர். இதனால் அங்கிருந்த ரூ.3 லட்சம் தப்பியது.

    இது குறித்து சித்தாமூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளை கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடையில் வியாபாரம் முடிந்ததும் விற்பனையாளர் பூட்டி சென்றார்.
    • கடையில் இருந்த பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடி சென்று விட்டனர்.

    தாளவாடி:

    தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு செல்லும் வழியில் உள்ளது ராமாபுரம். இந்த பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.

    நேற்று இரவு இந்த கடையில் வியாபாரம் முடிந்ததும் விற்பனையாளர் பூட்டி சென்றார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கடையில் இருந்த பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடி சென்று விட்டனர்.

    இதே போல் அருகில் உள்ள ஒரு மாரியம்மன் கோவிலிலும் திருட்டு நடந்துள்ளது.

    ×